சென்னை அருகே வாகன சோதனையின் போது என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்டனர் - பரபரப்பான சென்னை பாயும் என்கவுண்டர்கள் - Chennai - livecid.in

User2
0

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வாகன சோதனையில் போது போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்ற சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.



தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று 01-08-2023ம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது அந்த கார்.
அருகில் சென்ற பார்த்தபோது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். 

அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள். மேற்படி காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத் (35) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஷ் (32) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன்  குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


காயமடைந்த இரண்டு ரவுடிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் போலீஸ் வட்டாரத்தில் என்கவுண்டர் என்பது சற்று அதிகமாக உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
 
#news #tamilnadu #june #district #vandavasi #chennaifood #crime #robbery #greaterchennai #greaterchennaicorporation #robberynews #crimenews #dtnext #tnagar #narendramodinews #pmmodi #modijimemes #modiji #uppolice #stthomasmount #range #childabusecase #ambathur #flowerbazar #annanagar #washermanpet #madhavaram #safe #emergency #pulianthope


கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !