அ/மி. திரௌபதியம்மன் திருக்கோயிலில் இன்று (30.01.2026) நடைபெற்ற 4-ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை பக்தி பேரொளியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.பூந்தோட்டம் – திருச்சி-17
காலை முதலே பக்தர்கள் தொடர் வரிசையாக வருகை தந்து, கோயில் முழுவதும் ஆன்மீகச் சூழலால் ஒளிர்ந்தது.
மாலை 5.00 மணிக்கு துவங்கிய திருவிளக்கு பூஜை, வேத மந்திரங்கள், நாதஸ்வர ஓசைகள், திருவிளக்குகளின் ஒளி ஆகியவற்றால் திரௌபதியம்மன் ஆலயம் தெய்வீகத் ததும்பலாக காட்சியளித்தது.
இன்றைய விழாவில்:
✨ நலவாழ்வு,
✨ குடும்ப ஒருமை,
✨ எதிர்மறை சக்திகள் நீங்குதல்,
✨ வாழ்வில் முன்னேற்றம்,
✨ பிள்ளைப்பேறு நலன்,
✨ வேலை & வியாபார வளர்ச்சி
என்பவற்றைப் பெற பக்தர்கள் மனமார பிரார்த்தனை செய்தனர்.
எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டதால், இன்று நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை திரௌபதியம்மன் திருக்கோயில் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆன்மீக நாளாக அமைந்தது.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய
📿 குருக்கள், அர்ச்சகர்,
📿 அய்யா & அம்மன் பணியாளர்கள்,
📿 பக்தர்கள்,
📿 ஏற்பாட்டாளர் அங்கரசன் மற்றும் குழுவினருக்கு
மனமார்ந்த நன்றி!
திரௌபதியம்மன் தாயார் அருள் எப்போதும் அனைவருக்கும் நிறைந்து பொங்கட்டும்.
