பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை கொலை செய்த மனைவி - சென்னை ஓட்டேரி - www.livecid.in - மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு - Livecid - Crime News Gallery

User2
0

பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை கொலை செய்த மனைவி - சென்னை ஓட்டேரி - www.livecid.in - மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு -  Livecid - Crime News Gallery

சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த வர் பிரதீப் (43). இவரது மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு 20 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பும், மகன் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பிரதீப் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், வேலைக்குச் செல்லாமல், பெற்றோருக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருவாயை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். 



இந்நிலையில், 27-01-20 இரவு பிரதீப் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி, மகள், மகன் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் தனது மகளிடம் பிரதீப் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மகள் கூச்சலிட்டுள்ளார். அலறல் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த பிரீத்தா, கணவரின் செயலை கண்டித்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, பிரதீப் மனைவியை திட்டி அடித்துள்ளார். பின்னர், மீண்டும் தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால், வேறு வழியின்றி பிரீத்தா வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து வந்து பிரதீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 


இதனையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பீரதிப் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக  ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பிரதீப்பின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பிரீத்தாவை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, கணவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து விட்டு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். குடிபோதையில் மகளை பலாத்காரம் செய்ய வந்ததால் காப்பாற்ற தற்காப்புக்காக தாக்கிய போது கணவர் உயிரிழந்தார் என்று மனைவி கூறினார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குபதிவு செய்தாலும், பிரீத்தாவை சிறைக்கு அனுப்பாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மகளை பலாத்காரம் செய்ய வந்த கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !