16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர் கைது - சிறுமியின் வீட்டாரின் மேல் வழக்கு - Crime News Gallery - livecid

User2
0


திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி வயது (16), அதே பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (25). இவர் அந்த சிறுமியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  ஏற்கனவே சதீஷ்குமார் 16 வயது சிறுமியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த  விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கு தெரியவர சதீஷ்குமாரை கண்டித்துள்ளனர்.


இந்நிலையில்  மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சதிஷ்குமார் 16 வயது சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் மாணவி பயந்து கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சதிஷ்க்கு தர்மஅடி கொடுத்து அறையில் வைத்து பூட்டி விட்டு வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் சதிஷ்குமார் மீது போஸ்கோ சட்டத்தில் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில்  அடைத்தனர். அதன் பின்னர், சிறுமியின் உறவினர்கள் சதிஷ்குமார்  குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதிஷின் அத்தை காயமடைந்து பூந்தமல்லி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தாக்குதல் நடத்திய சிறுமியின் உறவினர்கள் 13 பேர் மீதும் வெள்ளவேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Reporter : Ezhumalai

#livecid #cid #crimetamil

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !