3 நாளிள் 40 ரவுடிகள் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை - C.விஜயகுமார் IPS - திருவாரூா் -livecid

User2
0

தொடர் வேட்டை நடத்திபொதுமக்களை அச்சுறுத்திய
40 ரவுடிகள் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்பேரில்  கடந்த 23.09.21 முதல் 25.09.21 வரை மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைது வேட்டை நடத்தப்பட்ட நிலையில் திருவாரூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார் IPS அவர்களின் நேரடி பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட போக்கிரி பதிவேடு குற்றவாளிகள் (H.S ரவுடி ) மற்றும் பிரச்சனைக்குரிய ரவுடிகள் ஆகியோரை பிடிக்க கடந்த மூன்று தினங்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.


ரவுடிகளின் வீடுகளுக்கு தனிப்படையினர் சென்று நடத்திய அதிரடி சோதனை மற்றும் வேட்டையில் 40 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று யாரேனும் பொதுமக்களை அச்சுறுத்தவோ பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம்  விளைவிக்கவோ போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் 
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

‌‌‌‌‌செய்தியாளர் : Elumalai

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !