திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாக வீதியில் நல்ல பாம்பு - பதறிய பக்தர்கள் - காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் - Live cid E-news

User2
0
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகம் தேரோடும் வீதியில் ஆடு, கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனை சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடு, கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் 3 அடி நீளம் உள்ள நல்லபாம்பு புகுந்ததாக சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் விஜயகுமார், ஜீவா, அலெக்சாண்டர், சதீஷ்குமார்,பெரியசாமி, உள்ளிட்ட வீரர்கள் விரைந்து வந்து சமயபுரம் கோயில் வளாகத்தில் காணிக்கை செலுத்தும் இடத்தில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், பாம்பு அங்கும் இங்கும் ஓடியது. சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப்பின் பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் பாம்பை சாக்கு பையில் அடைத்து வயல்வெளி காட்டுப்பகுதியில் பாம்பை பத்திரமாக விட்டனர்
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !