கணவனை இழந்த பெண்ணுக்கு காதல் வலை வீசிய காளிமுத்து - கண்டித்த பெற்றோரை கொலை செய்ய துணிந்த காளி - திக் திக் திண்டுக்கல் - Livecid

User2
0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெள்ளையகவுண்டனூர் பச்சலாகவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவரது மனைவி ராணி(54). இவர்கள் மகள் உமா. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உமாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது பெற்றோருடன் தங்கி மில் வேலைக்கு சென்று மகன்களை படிக்க வைத்தார். அப்போது தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த காளிமுத்து (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 


நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இந்த விபரம் உமாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் மகளை கண்டித்தனர். இதனைதொடர்ந்து உமா காளிமுத்துவுடன் உள்ள தொடர்பை துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து உமா வீட்டுக்கு சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டை வீட்டு ஓடினர். 

www.livecid.in Crime News Gallery - Trending


அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தம்பதியை காப்பாற்றினர். காயமடைந்த 2 பேரை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காளிமுத்துவை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து காளிமுத்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !