சென்னையில் இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் அட்டூழியம்-livecid.com(www.livecid.com)#livecid

Admin
0
சென்னையில் இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் அட்டூழியம்-livecid.com(www.livecid.com)#livecid

பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து அரும்பாக்கத்தை அடைந்த போது ‘ரூட்டு தல’ (பஸ் டே) தொடர்பாக மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஒரு தரப்பினர், பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாக் கத்திகளை எடுத்து எதிர் தரப்பை தாக்கத் தொடங்கினர். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பயணிகள் அலற, டிரைவர் பேருந்தை அப்படியே நிறுத்துவிட்டார். ஆயுதங்களுடன் தாக்கத் தொடங்கியதால், எதிர் தரப்பு மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடிக்க, விடாமல் துரத்திய அந்தக் கும்பல் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியது.
ஆயுதங்களை ஏந்தியபடி சாலையில் அங்கும் இங்கும் நடமாடிய மாணவர்களால், பொதுமக்கள் பீதி அடைய, பேருந்தில் இருந்த பெண்கள் உயிரைக் கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் செல்வதற்குள், பட்டாக் கத்திகளுடன் அந்த மாணவர்கள் தப்பிச் சென்றனர். இத்தாக்குதலில் வசந்த் என்ற இரண்டாம் ஆண்டு மாணவருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டப் பகலில், நட்ட நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் மாணவர்களின் இந்த அட்டூழியம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !