மனைவியை கணவரே அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம்- கணவரை கைது செய்த போலீசார்-விருத்தாசலம்-www.livecid.com-Live CID

Admin
0
மனைவியை கணவரே அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம்- கணவரை கைது செய்த போலீசார்-விருத்தாசலம்-www.livecid.com-Live CID 

விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்திபன் (வயது 27). தொழிலாளி. இவருக்கும், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியா (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிவப்பிரியா கடந்த மாதம் திடீரென வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டார். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கணவரை கைது விசாரணை நடத்தினர்.

விசாரணையை போலீஸார் தீவிரபடுத்தி பல கோணத்தில் விசாரித்த போது, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கணவர் பார்த்திபன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, சிவப்பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினேன் என்றார். மேலும், சிவப்பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, இந்த கொலைக்கு பார்த்திபனின் தாய் கவுரி (50), சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Detective investigation will continue www.livecid.com 

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !