கணவன் முன்னே மனைவியை மாறி மாறி கற்பழித்த 5 இளைஞர்கள்|Livecid.com

Admin
0

கணவன் முன்னே மனைவியை மாறி மாறி கற்பழித்த 5 இளைஞர்கள்|Livecid.com


கணவனை அடித்து கட்டிப்போட்டுவிட்டு அவர் கண் முன்னே மனைவியை 5 இளைஞர்கள் கற்பழித்து அதை வீடியோவாக எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள லால்வாடி கிராமத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் தலவிருக்‌ஷா பகுதிக்கு சினிமா பார்க்க, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, 5 இளைஞர்கள் அவர்களை வழிமறித்து, வலுக்கட்டாயமாக ஆளில்லாத மறைவிடத்திற்கு தூக்கிச் சென்றனர்.
அதன்பின், பெண்ணின் கணவனை கைகளை கட்டிவிட்டு 2 இளைஞர்கள் சராமரியாக அடிக்க, மற்ற 3 பேரும் மாறி மாறி அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்துள்ளனர். கணவனை அடித்துக்கொண்டிருந்த அவர்களும் அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். அப்போது அந்த கொடூர இளைஞர்கள், மற்றவர்கள் கற்பழிக்கும்போது வீடியோவாக எடுத்து அதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளனர். 
மேலும், இதன்பேரில், காஜி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். வீடியோவில் பதிவான ஆடியோவை வைத்து குறிப்பிட்ட 5 இளைஞர்களின் பெயரையும், அங்க அடையாளத்தையும் கண்டுகொண்ட போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !